எப்பொழுதும் பச்சரிசி பொங்கல் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? கவலை வேண்டாம் சேமியா பொங்கலை முயற்சித்து பாருங்கள். பொங்கல் என்றாலே அலறியடித்து கொண்டு ஓடும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 2 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.
வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.
அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.
சேமியா வெண் பொங்கல் ரெடி.
Source - Semiya venpongal Tamil Online News
No comments:
Post a Comment