26 Aug 2019

சுவையான சிவப்பு அவல் உப்புமா.! செய்வது எப்படி.!

aval payasam, aval food, rice aval, aval upuma,
aval uppuma

அவல் என்றாலே உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இது தான் சரியான தேர்வாகும். அதிலும், சிவப்பு அவல் என்றால் மிகவும் ஸ்பெஷல். அதை வைத்து எப்படி உப்மா செய்யலாம் என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - 1 கப்,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
வெங்காயம் - 2
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


தாளிக்க:

கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு.


செய்முறை :

அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரோ வடித்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, போட்டு தாளித்து கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் அவலை சேர்த்து கிளறி அதனுடன் உப்பு சேர்க்கவும்.
பின்னர் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறி வாணலியை மூடி வேக வைக்கவும். 5 நிமிடம் வேகவைத்து பின்னர் தேங்காய் துருவல் இட்டு உடனே அடுப்பை அணைத்து விடவும்.
மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும். மணமணக்கும் அவல் உப்மா தயார்.

Courtesy - Tamil News Online 

வித்தியாசமான சிக்கன் பொரியல்.! இப்படி ட்ரை பண்ணுங்க.!!

chicken fry, chettinad chicken, indian chicken fry, tamilnadu chicken fry,

தேவையான பொருட்கள் :
உப்பு - சிறிதளவு
சிக்கன் - தோல்நீக்கியது.
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு  - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 6 பல்


செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனை வேகவைத்து எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, தேங்காய் துருவல், வெங்காயம் போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த சிக்கனை அதில் போட்டு கலந்து உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி சிக்கனுடன் ஊற்றவும்.
பின் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான சிக்கன் பொரியல் ரெடி.

Source - Tamil News Online

கர்ப்பிணிகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு.!

food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களியையும், பனைவெல்லத்தையும் சாப்பிட்டு, கருப்பையை வலிமையாக வைத்திருந்தனர் நம் முன்னோர். ஆனால் இன்று, உளுத்துப்போன துரித உணவு ரகங்களையும் சத்தில்லா உணவையும் அதிகம் தேர்ந்தெடுப்பதால் வலிமையற்றுக் கிடக்கின்றன பலருடைய கருப்பைகள்.
வலிமையான கருப்பையை உருவாக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு மற்றும் வாழ்க்கைமுறைகள் ஏராளம். சிறு வயது முதலே கருப்பையை பலமாக்கும் உணவையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டால், கருப்பை நிச்சயம் வலுவாக மாறும்.


food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களி, பனை வெல்லம், நல்லெண்ணெய், வாழைப்பழம், கோழி முட்டை போன்றவை பூப்பெய்திய பெண்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவாக இருந்தன. `இடுப்புக்கடு பலமாம்’ என்கின்ற சித்தர் பாடல், உளுந்தால் செய்த உணவுகள் பெண்களின் இடுப்புக்கு வலிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அளவாக உண்டால் உடலுக்கு வலிமையையும் அழகையும் உளுந்து கொடுக்கிறது. உளுந்து சேர்த்து சமைத்த சாதம் பண்டைய தமிழர்களின் திருமண நிகழ்வுகளில் இடம்பெற்றிருப்பதை அகநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது. விலங்கின மருத்துவத்தில் விலங்குகளின் மகப்பேறு காலத்தில், கருப்பை தசைகளை வலுப்படுத்த உளுந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களியில் நல்லெண்ணெய் கலந்து, “இதைக் கண்டிப்பா சாப்பிடணும், இல்லனா வயிறு வலிச்சிக்கிட்டே இருக்கும்” என்று பூப்பெய்திய இளம் பெண்களை, அக்கால வீட்டு மருத்துவர்கள் பயமுறுத்தி சாப்பிட வைத்துள்ளனர். இதன் காரணமாகத்தானோ என்னவோ அன்று, `சிசேரியன் மகப்பேறு’ என்பது கேள்விப்படாத சொல்லாக இருந்தது.

புரதம், இரும்புச் சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளாவின், நியாசின் போன்ற வைட்டமின்கள் உளுந்தில் அதிக அளவில் இருக்கின்றன. இனிப்புச் சுவை கொண்ட உளுந்து, மாதவிடாயின்போது உண்டாகும் பித்தத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. மாதவிடாய் முடிந்து 6 14 நாட்களில் உளுந்து வகை உணவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

Source - food for pregnant women

இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளலாம்..!!

face wash, facial, natural facial, facial at home, facial at myself,





ஃபேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும், இறந்த செல்கள் நீங்கும், முகம் தெளிவாகி பளிச்சென மாறும். இதை பார்லர் சென்றால்தான் மாற்ற முடியும் என்பதல்ல. வீட்டில் இருந்தே செய்யலாம். எவ்வாறு என்பதைக் காணலாம்.
முதலில் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பருத்தித் துணியால் துடைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு தேனில் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதை  10 நிமிடங்கள் செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி , சருமத் துகள்கள் விரியும். அழுக்குகள் நீங்கும். பின்னர் முகத்தை தண்ணீரால் கழுவி துடைத்துவிடவும்.
அடுத்ததாக அடுப்பில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அந்த தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். முகத்தில் நீராவி பட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள், வெண்மை நீங்கும்.

facial, facial, natural facial, facial at home, facial at myself, face wash, facial wash,

முகத்தை துடைத்து சுத்தம் செய்தபின் ஓட்ஸ் மாவு , தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கி முகத்தில் மாஸ்க்காக அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.
முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இறுதியாக சருமம் ஈரப்பதமாக கற்றாழை ஜெல் அல்லது ஏதேனும் மாய்ஸ்சரைஸர் இருந்தால் தடவவும்.

கற்றாழை ஜெல்லைக் கொண்டு மூன்று நாட்களுக்கு மசாஜ் செய்யுங்கள். முகம் பளிச்சென இருக்கும். முடிந்தால் அவ்வபோது ஏதேனும் மாஸ்க்குகளும் போட்டு வாருங்கள். இதை சரியாக செய்து வந்தால் நீங்கள் பார்லரே போக வேண்டாம்.

Source - facial at home naturally

24 Aug 2019

சத்தான முளைகட்டிய தானிய சாலட்.! செய்வது எப்படி.! 

salad, healthy salad, indian salad, tamilnadu salad, salad preparation, migraine salad.

தேவையான பொருட்கள் :

நிலக்கடலை - 25 கிராம்,
பச்சைப் பயறு - 50 கிராம்,
தக்காளி - 1
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை :
வேர்க்கடலை மற்றும் பச்சைப் பயறை ஊறவைத்து, குறைந்தது ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளி, வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் தக்காளி, வெங்காயம், கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதன்மீது பாதி எலுமிச்சை சாறைப் பிழிந்து, அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பவும்.
சுவையான, சத்தான முளைகட்டிய தானிய சாலட் தயார்.!

Source - how to prepare dhaniya salad 

22 Aug 2019

சுக்கு மற்றும் ஏலக்காயின் அபார நன்மைகள் !

சுக்கு, இஞ்சி, மிளகு, ஏலக்காய், sukku, inji, elakkai, milagu, benefits of sukku, benefits of dry ginger, benefits of cardamom, benefits of elakkai,

சுக்கு பயன்கள்:
இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.
சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

பசியின்மையைச் சரிசெய்யும்.   உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.
தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு  பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.


சுக்கு, இஞ்சி, மிளகு, ஏலக்காய், sukku, inji, elakkai, milagu, benefits of sukku, benefits of dry ginger, benefits of cardamom, benefits of elakkai,


ஏலக்காய் பயன்கள்:
ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப்  பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும். கபத்தைக் குறைக்கும்  தன்மை ஏலக்காய்க்கு உண்டு. பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன. ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

Thanks - Benefits of Cardamom and dry ginger 

21 Aug 2019

கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கும் கொள்ளு அடை.!

kollu adai, kollu, adai, how to remove fat, reduce body fat, how to slim, food for body weight reduce,


உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளை பயன்படுத்தி சுவையான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 
இட்லி அரிசி - ஒரு கப்
பச்சரிசி - அரை கப்
கொள்ளு - ஒன்றரை கப்
கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுப்பருப்பு சேர்த்து, தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.

ஊறவைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும் (சுமார் 30 நிமிடங்கள்). அரைத்த மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி தோசையைச் சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு முறுகலானதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும்.

சுவையான கொள்ளு அடை தயார்.

நன்றி - how to prepare kollu adai in tamil

செம்பருத்தியின் நன்மைகள் | Benefits of Sembaruthi

செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்களை நாம் அறிவோம், செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எடுத்து அதனை நமது தோழர்கள் கொடுத்து உண்பதும் பள்ளிகளின் தோட்டங்களில் இருக்கும் செம்பருத்தி செடியில் இருக்கும் செம்பருத்தி பூவை பறித்து நண்பர்களுடன் சாப்பிட்ட காலமும் உண்டு. உடலுக்கு நல்ல விதமான பயன்களை அளிக்கும் செம்பருத்தி மருத்துவகுணங்கள் பற்றி காண்போம்.

" செம்பருத்தி பூவை காயவைத்து பொடியாக அரைத்து பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேலையில் பருகி வந்தால், இதயமானது பலம் பெரும் "


இதில் இருக்கும் குளிர்ச்சித்தன்மை மற்றும் இனிப்பு சுவையின் காரணமாக உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைத்து, மலத்தை இளக்கி, உடலின் வறட்சியை அகற்றி, உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் காயத்தை ஆற்றுகிறது. மேலும், காமத்தை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது மாதவிடாயை தூண்டுகிறது.
செம்பருத்தி பூவின் மூலமாக நரைமுடி பிரச்சனை மற்றும் முடியின் வளர்ச்சி ஆகியவை வெகுவாக அதிகரிக்கிறது. மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால், தாமதமாக ஏற்படும் மாதவிடாய்யானது சரியான நேரத்தில் ஏற்படும்.

செம்பருத்தி, செம்பருத்தி பூ, செம்பருத்தி மலர், sembaruthi, flower, red flower,

செம்பருத்தி பூவை அடாதோசை தளிர் இலைகளுடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் இருமலானது நீங்கும். தலையில் இருக்கும் பேன்களை நீக்குவதற்கு செம்பருத்தி பூக்களை தேய்த்து குளித்து குளித்து வந்தால்., பேன்கள் தலையில் இருந்து வெளியேறி பேன் தொல்லை குறையும்.

செம்பருத்தி பூவை காயவைத்து பொடியாக அரைத்து பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேலையில் பருகி வந்தால்., இதயமானது பலம் பெரும். உடலின் இரும்பு சத்தானது அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

நன்றி - Benefits of Sembaruthi