28 Sept 2019

வீட்டிலேயே பூண்டு ஊறுகாய்.! அப்படி ஒரு சுவை.! 

garlic pickle recipe,


என்ன தான் வீட்டில் கஷ்டப்பட்டு ஊறுகாய் செய்த போதும், கடையில் வாங்கும் ஊறுகாய் போல இல்லையே என்று வருத்தப்படுவோர் அதிகம். அவர்களுக்காக இப்பொழுது பூண்டு ஊறுகாய் எப்படி சுவையாக செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 1/2 கப்
பூண்டு - 1 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை :

பூண்டை நன்றாக தோல் உரித்து சுத்தமாக எடுத்து கொள்ளவும். வெந்தயம், சீரகம், மல்லியை தனித்தனியாக வறுத்து, ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பின்னர், பூண்டை எடுத்து போட்டு வாசம் வருமாறு வதக்கவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பின்னர் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி, நன்றாக கெட்டியாகும் வரை கிளற வேண்டும். பின்னர் இறக்கி அதை ஆறவைத்து குளிந்த பின்னர், காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

சுவையான பூண்டு ஊறுகாய் ரெடி!! இதனை சாதத்திற்கு அப்படியே துவையலாக பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Source - Garlic pickle recipe Tamil Online News

சேமியா வெண் பொங்கல் செய்து அசத்துங்கள்.! குட்டீஸ் ஸ்பெஷல்.!

Semiya venpongal,

எப்பொழுதும் பச்சரிசி பொங்கல் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? கவலை வேண்டாம் சேமியா பொங்கலை முயற்சித்து பாருங்கள். பொங்கல் என்றாலே அலறியடித்து கொண்டு ஓடும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்.

தேவையான பொருட்கள் :

சேமியா - 2 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை : 

டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.
வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.
அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

சேமியா வெண் பொங்கல் ரெடி.

Source - Semiya venpongal Tamil Online News

மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான மிளகு சூப் ரெசிபி..!

pepper soup recipe, pepper soup,

மழை காலத்திற்கு ஏற்ற சூடான, காரமான மிளகு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

அரைத்த மிளகு – 1 ஸ்பூன்
சுக்குப் பொடி – 1 ஸ்பூன்
பூண்டுப்  – 3 பல்
தக்காளி – 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
நெய் – அரை ஸ்பூன்

செய்யும் முறை :

கடாயில் நெய்விட்டுச் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
அதோடு தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள்.

சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள்.

Source - Pepper soup recipe Tamil Online News 

நோய் தீர்க்கும், இஞ்சி மிட்டாய்.! வீட்டிலேயே செய்வது எப்படி.! 

ginger marapha,

நம்மில் பெரும்பாலனோர் மேற்கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்க முறைகளின் காரணமாக நமது உடல் நலமானது பாதிக்கப்பட்டு, அதன் மூலமாக நெஞ்சு எரிச்சலானது ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் இஞ்சி மிட்டாயை வாங்கி உண்ணும் பழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில், இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே தயார் செய்வது குறித்து இனி காண்போம்.

தேவையான பொருட்கள்: 

இளம் இஞ்சி - 200 கி,
பாகு வெல்லம் - 300 கி,
கோதுமை மாவு - ஒரு தே.கரண்டி,
ஏலக்காய் தூள் - ஒரு தே.கரண்டி,
நெய் - 2 தே.கரண்டி.


செய்முறை: 

இஞ்சியின் தோலை சுத்தமாக நீக்கிவிட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு போன்று காய்ச்ச வேண்டும்.
வெல்லமானது பாகாக மாறியவுடன், அரைத்த இஞ்சியை சேர்த்து சிறிது நேரத்திற்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கலக்கி வைக்கப்பட்டு இருந்த கோதுமை கரைசலுடன், நெய் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து அனைத்தையும் சிறிது ஒன்று சேர்த்து சூடுபடுத்தி எடுக்க வேண்டும்.

பின்னர் தயாராக்கிய கலவையை துண்டாக போட்டு எடுத்தால் சுவையான மற்றும் உடலுக்கு உகந்த இஞ்சி மிட்டாய் ரெடி...!

Source - ginger marapah recipe Tamil Online News 

புரட்டாசி ஸ்பெஷல்: குடைமிளகாய் மசால் ரைஸ்.! செய்வது எப்படி.!


udaimilakai, masal rice,

தேவையானப் பொருட்கள்:

குடைமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி - கால் கோப்பை
உப்பு - தேவைகேற்ப
நெய் அல்லது எண்ணெய் - ஒரு சிறிய கரண்டி

செய்முறை:

கடலைபருப்பு உளுத்தம்பருப்பை கழுவி வைக்கவும். இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை அரைத்து வைக்கவும்.
இரண்டு கோப்பை  அரிசியை உதிரியாக வடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் கடலைபருப்பு உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வதக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் அரைத்த விழுதைப் போடவும்.பின்பு அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் உப்பு பெருங்காயத்தைப் போட்டு வதக்கி வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறவும்.

நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வறுத்த முந்திரி பருப்பால் அலங்கரித்து பரிமாறவும்.குடை மிளகாய் சாதம் தயார். சுவைத்துப் பாருங்கள்.

Source - kudaimilakai special rice Tamil Online News

சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி கூட்டு.! எப்படி செய்வது.?!

mullangi koottu,


தேவையான பொருட்கள்:

மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
வெங்காயம் - 1 பெரியது
முள்ளங்கி - கால் கிலோ
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
சிறு பருப்பு - 50 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கழுவிய முள்ளங்கியின் தோலை சுத்தமாக சீவி விட்டு, பின்னர்  அதனை சிறு சிறு துண்டாக வெட்டி கொள்ளவும்.
நன்றாக கழுவிய சிறு பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பருப்பு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பின்னர் அதில் கால் கப்பிற்கும் குறைவாக சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விட்டு எடுக்கவும்.
கடாயை அடுப்பில் இட்டு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கியை அதில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சுவையான முள்ளங்கி கூட்டு தயார்.

Source - mullangi kootu preparation Tamil Online News 

23 Sept 2019

தாய்மார்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய முருங்கை பொரியல்.!

murungai keerai, poriyal, murungai poriyal, murungai keerai poriyal, murungai keerai recipe, food for pregnant, food for pregnant women, keerai recipe, benefits of keerai,

முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்பு சத்து உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றது. 46 வகையான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. இந்த கீரையை கொண்டு பொரியல் செய்து சாப்பிடுவது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - 1 கட்டு
கடுகு - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்
கல் உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ½ கப்.

murungai keerai, poriyal, murungai poriyal, murungai keerai poriyal, murungai keerai recipe, food for pregnant, food for pregnant women, keerai recipe, benefits of keerai,

செய்முறை:

முதலில் முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். கீரையை மொத்தமாக எடுத்து திருகி லேசாக பொடித்து கொள்ளலாம்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், அதில், காய்ந்த மிளகாய், கடுகு, சேர்த்து கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீரையை அதில் கொட்டி அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காயை போட்டு கிளறி இறக்கி சிறிது நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தால், கமகமக்கும் சத்தான முருங்கைக் கீரை பொரியல் தயார்.!

Source - Murungai poriyal recipe Tamil Online News

சுவையான ப்ரெட் சூப்.! மணக்க மணக்க செய்வது எப்படி.! 

bread soup, german bread soup, bread soup recipe, bread soup bowl,.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 6,
பிரெட் துண்டுகள் - 4,
வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், நெய் - தலா அரை டீஸ்பூன்,
கோஸ் - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
முட்டைக்கோஸை துருவி எடுத்துக்கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரில் தக்காளியை போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர், நெய் ஊற்றி துருவி கோஸ், மிளகுத்தூள், தக்காளி சாறு, உப்பு சேர்த்து லேசாக சூடாக்கி கொள்ளவும்.

பின்னர் பிரெட்டை பொடித்து அதில் சேர்த்து, அத்துடன் சோள மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளி பிரெட் சூப் தயார்.

Source - BREAD SOUP RECIPE IN TAMIL Tamil online News

சுவையான பட்டாணி முட்டை கீமா செய்வது எப்படி..!

pattani egg keema, egg keema, pattani keema,

பட்டாணி, முட்டை சேர்த்து செய்யும் இந்த கீமா சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
முட்டை - 4
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
பெரிய வெங்காயம் - 1

செய்யும் முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.
தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.
இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான பட்டாணி முட்டை கீமா ரெடி.

Source - Pattani muttai keema recipe Tamil Online News

சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெசிபி..!

tomato, paneer, sandwich, recipe, tomato paneer sandwich, tomato recipe, paneer recipe, paneer sandwich recipe, tomato paneer sandwich recipe,

தேவைப்படும் பொருட்கள் :

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பன்னீர் - 1/2 கப்
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை :
-
தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.
பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

Source - Tomato paneer sandwich recipe Tamil Online News

18 Sept 2019

காரசாரமான மாவடு ஊறுகாய் செய்வது எப்படி.?

maavadu, mango pickle, pickle, mango,

காரசாரமான மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தயிர், மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது ருசியாக இருக்கும் .

தேவையான பொருட்கள்: 

மாவடு – ஒரு கிலோ
கல் உப்பு- தேவைகேற்ப
கடுகு – 2 ஸ்பூன்
விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்.
மிளகாய்த்தூள் – 50 கிராம்

செய்யும் முறை:

மாவடுவை காம்பு நீக்கி நல்லா கழுவி, சுத்தமான துணியில் துடைத்து தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் நிழலில் காய வைக்க வேண்டும். மா வடு நன்கு உலர்ந்த பின்பு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலக்க வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன்பின்னர் வறுத்துப் பொடித்த கடுகு, மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து விட வேண்டும். எல்லாம் நன்கு கலந்த பின் குலுக்கிவிட வேண்டும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அடிக்கடி குலுக்கிவிட வேண்டும். இதை காரம் சேர்க்காமலும் செய்யலாம். நல்ல காரம் வேண்டும் என்றால் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மாவடு மாங்காய் ஊறுகாய்.

Source - Maavadu pickle Tamil News Online

சுவையான முட்டை சான்விஜ் செய்வது எப்படி.! 

egg, sandwich, egg sandwich, preparation,

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரெட் துண்டுகள் - 2
முட்டைகள் - 2
உப்பு -  தேவையான அளவு
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் -  ½  தேக்கரண்டி
பால் -  சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை போட்டு சூடான பின்னர் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை அதில் ஊற்றி மென்மையாக கிளறி கொள்ளவும். கெட்டியாகி உதிரியாக வந்த பின்னர் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு, சூடான பின்னர் 2 கோதுமை பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும்.
பின்னர் தட்டில் பிரெட்டை வைத்து அதில் முட்டை கலவையை சேர்த்து, அதன் மீது இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைத்து பரிமாறவும்.
சூப்பரான முட்டை சாண்ட்விச் ரெடி.!

Source - Egg Sandwich Tamil News Online 

நார்சத்து மிகுந்த, பச்சைப் பயறு குழம்பு.! செய்வது எப்படி.?

pachaipayaru, kuzhampu, preparation, pachai payaru, Pachai payaru kulambu in tamil,

பச்சை பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன. இதை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - 1 கப்
பூண்டு - 5
தக்காளி - 1
மஞ்சள் - 1 tbsp
வெங்காயம் - 2
தாளிக்க
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1/4 tbsp
சீரகம் - 1/4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1

செய்முறை

பச்சை பயறை முதல் நாள் இரவு கழுவி ஊற வைக்கவும்.
மறுநாள் குக்கரில் பச்சை பயறு, தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்ததும் இறக்கி ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் , காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்தபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலையை உருவி போடவும்.

நன்கு வெங்காயத்தை வதக்கியதும் மசித்து வைத்துள்ள பயரைக் கொட்டிக் கிளறி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நீர் கொஞ்சம் இறங்கியதும் தேவைக்கு ஏற்ப கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு குழம்பு தயார்

Source - Pachai payaru kulambu in tamil Tamil News Online

16 Sept 2019

சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு.! செய்வது எப்படி.! 

peanut laddu, peanut, laddu,

தேவையான பொருட்கள் :

ஏலக்காய் தூள் - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
வெல்லம்/கரும்பு சர்க்கரை - 3/4 கப்

செய்முறை :

வறுத்த வேர்க்கடலையை முதலில் ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்கி எடுத்து கொள்ளவும்.
பின்னர் தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் அரைக்கவும்.

பின்னர் ஒரு தட்டில் அதை கொட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!
வேர்க்கடலை, எண்ணெய் விடும். எனவே, உருண்டைகளாய் உருட்ட வேறு எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Source - Peanut Laddu Tamil News Online

செலரி கீரை சூப்பை குடித்தால் உடனே ஸ்லிம் ஆயிடலாம்.! 

celery soup, soup, soup with celery, soup for weight loss,

தேவையான பொருட்கள் :

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்,
செலரி கீரை - 2
பூண்டு - 2 பல்,
சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

அடிப்பகுதியை நீக்கிவிட்டு செலரியை அலசி, அதன் தண்டு  மற்றும் இலையை மட்டும் பொடி, பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஆறு மணி நேரம் ராஜ்மாவை ஊறவைத்து, வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதனை மிக்சியில் போட்டு அத்துடன் தக்காளி, பச்சை மிளகாய், முக்கால் கப் செலரி கீரை, பூண்டு, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து மீதமுள்ள செலரி இலைகளை அதில் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறினால் சுவையான சத்தான செலரி சூப் தயார்.!

Source - Celery Soup Tamil News online

காளான் பன்னீர் வடை.! வீக்கெண்ட் ஸ்பெஷல்..!

kalan vada,

தேவைப்படும் பொருட்கள்:

காளான் - அரை கப்
பன்னீர் - அரை கப்
கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
கடலை மாவு - 5 ஸ்பூன்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை:

காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.

Source - Kaalan Vada Tamil News online

கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும் புதினா ஜூஸ்.! செய்வது எப்படி.!

mint leaves, medicinal uses of mint leaves, mint juice, mint julep recipe

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் - 1 கைப்பிடி,
பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

பயன்கள்: 
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வாய்யில் ஏற்படும் நாற்றம் அகலும், பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்கி அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அடிக்கடி தோன்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.
கடுமையான வயிற்றிப் போக்கின் போது இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும்.
தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் போன்றவற்றிற்கு புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் அவர்களின் தீராத வேதனை குறையும்.

புதினா சாரை முகத்தில் தடவி வர முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் நல்ல பலன் கிடைக்கும்.

Source - Mint juice Tamil News Online  

வெந்தையக்கீரை சாதம்.! செய்வது எப்படி.!

vendhaya keerai satham,

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிண்ணம்.,
வெந்தயக்கீரை - 1 கட்டு.,
தக்காளி - 1 எண்ணம் (Nos).,
வெங்காயம் - 1 எண்ணம் (Nos).,
இஞ்சி - 1 துண்டு.,
பூண்டு - 5 பற்கள்.,
பச்சை மிளகாய் - 3 எண்ணம் (Nos).,
மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் - தலா அரை தே.கரண்டி.,
சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1 தே.கரண்டி.,
தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்.,
எண்ணெய் - 2 மே.கரண்டி.,
உப்பு - தேவைக்கு ஏற்ப...

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வெந்தயக்கீரை இலைகளை தனியாக பிரித்தெடுத்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக நறுக்கி., இஞ்சி பூண்டு மற்றும் மிளகாயை சேர்த்து நறுக்கி கொள்ளவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி பூண்டு., இஞ்சி., பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி., வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கி., கீரையை சேர்த்து பின்னர் மிளகாய் தூள்., மஞ்சள் தூள்., சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் தேவையான அளவு தேங்காய்ப்பால்., தண்ணீர் மற்றும் உப்பு., அரிசி ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து., ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். சுவையான வெந்தயக்கீரை சாதம் தயார்..

source - Vendhaya keerai satham Tamil news Online

11 Sept 2019

கமகம மனம் வீசும் தேங்காய் பால் பிரியாணி.! செய்வது எப்படி.!

Coconut milk briyani, Coconut, briyani, different types of briyani, briyani types, thengai paal briyani, thengai paal, coconut milk,

தேங்காய் பால் பிரியாணி எப்படி செய்வதென பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

பாசுமதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
புதினா - 1/2 கப்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 10 பற்கள்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2 ஏலக்காய் - 1


செய்முறை :

பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

Coconut milk briyani, Coconut, coconut milk, briyani, different types of briyani, briyani types, thengai paal briyani,

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

Source - Coconut Milk Briyani

மந்திரியை விட பெரிய பலம் முந்திரிக்கு தானாம்.!

முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்தியாவை பொருத்த வரை இது தான் மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ்ம் கூட. இந்த முந்திரி பருப்பில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். அது பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

cashew nut, cashew, cashew nut picture, benefits of cashew nut, nuts, healthy nuts,

இந்த முந்திரி பருப்பை நீங்கள் மற்ற வகைகளில் கூட எடுத்துக் கொள்ளலாம். முந்திரி பருப்பு பால், க்ரீம், முந்திரி சீஸ் வகைகள், க்ரீம் சாஸ் போன்ற வடிவில் கூட பயன்படுகிறது. இந்த முந்திரி பருப்பு மருத்துவ துறையிலும், வருமானம் ரீதியாகவும் நிறைய வகைகளில் பயன்படுகிறது.

" இந்த முந்திரி பருப்பில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு, பாலிஅன்சேச்சுரேட்டேடு கொழுப்பு போன்றவை உள்ளன. "


எடை குறைப்பு :

தற்போது நடத்திய ஆய்வுப்படி நட்ஸ் சாப்பிடாத பெண்கள் அதிக உடல் பருமன் கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து சிக்கென்று இருப்பீர்கள்.

cashew nut, cashew, cashew nut picture, benefits of cashew nut, nuts, healthy nuts,

இதய ஆரோக்கியம் :

இந்த முந்திரி பருப்பில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு, பாலிஅன்சேச்சுரேட்டேடு கொழுப்பு போன்றவை உள்ளன. இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை, ட்ரைகிளிசரைடு போன்றவற்றை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை சமன் செய்கிறது. இதனால் இதய நோய்கள், பக்க வாதம், கரோனரி இதய நோய்கள் போன்றவை வராமல் காக்கிறது.

Source - Cashew Nut benefits 

10 Sept 2019

சுவைமிக்க ஆப்பிள் அல்வா.!

apple alwa, halwa, apple,

அல்வா என்று கூறினாலே வாயில் இருந்து நீர் உமிழ துவங்கிவிடும். ஏனெனில் அல்வாயை சாப்பிடும் போது அதன் சுவையில் மெய் மறந்து போய் விடுவோம். மாதத்திற்கு ஒரு முறை சுவையான பொருட்களை வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணுவார்கள்.


ஆப்பிள் அல்வா செய்ய தேவையான் பொருட்கள்: 
ஆப்பிள் - 3 பழங்கள்.,
பால் - 1 கிண்ணம்.,
சர்க்கரை - 50 கிராம்.,
நெய் - 4 தே.கரண்டி.,
ஏலக்காய் - 3 எண்ணம்.,
கேசரி பவுடர் - சிறிதளவு.,
பாதாம் மற்றும் முந்திரி - 5 எண்ணங்கள்.

ஆப்பிள் அல்வா செய்யும் முறை:
ஆப்பிளை சுத்தமாக கழுவி அதன் தோலை நீக்கி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். வானெலியில் நெய்யை ஊற்றி., நெய் சூடானதும் ஆப்பிள் மற்றும் நெய்யை நன்றாக நீர் இறுகும் வரை கிளறவும்.

apple alwa, halwa, apple,

நீர் இறுகியவுடன் அதில் பாலை ஊற்றி சுமார் 3 நிமிடங்கள் கிளறிய பின்னர்., சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்ட பின்னர் கேசரி பொடி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்ட பின்னர் முந்திரி மற்றும் பாதாமை கிளறி இறக்கவும்.

apple alwa, halwa, apple,

இப்போது சூடான சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.!!

source - Apple Alwa

பெண்களே... அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?

sex torture in job

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் ஆண்களோடு இணைந்து வேலை பார்க்கும் சூழல்கள் இருக்கின்றன. ஒரு ஆண்-பெண் நட்புறவு என்பது ஒரு எல்லைக்குட்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் பெருமளவில் பிரச்சனைகள் ஏற்படும்.

பெண்கள் அவர்களை ஆண்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு கலைகளை கற்று வைத்துக் கொள்வது சிறந்தது ஆகும். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் ஆண்களிடம் எவ்வாறு நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நம் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டாமல், நேர்த்தியாக அணிவது நல்லது.

அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்தாலும் மொபைல் நம்பர்களை கொடுக்க வேண்டாம். நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும் மொபைல் நம்பர்களை கொடுக்கலாம்.
உங்களுடைய குடும்ப விஷயங்கள், பர்சனல் விஷயங்களை உங்களுடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் சொல்லாதீர்கள். ஏனெனில் அங்கேதான் பிரச்சனைகள் உருவாகும்.

நீங்கள் ஆண்களிடம் நட்பு ரீதியாக மட்டும் புன்னகை செய்யுங்கள். காரணமில்லாமல், எல்லாவற்றிக்கும் அவர்களிடம் சிரிக்காதீர்கள். பிறகு கைகுலுக்குதல், தேநீர் அருந்துதல், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுதல் போன்றவற்றை செய்யாதீர்கள்.
உங்கள் மனதில் அலுவலகம் என்பது பணிபுரியும் இடம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளுக்கும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் இது இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
பணிபுரியும் இடங்களில் உங்களிடம் யார் பேசினாலும் கண்ணை பார்த்து பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு சத்தமாக சிரிக்காதீர்கள்.

அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் குறை சொல்லும் அளவிற்கு உடை உடுத்தாதீர்கள். அது போல் தேவையில்லாத விஷயங்களுக்கு வெட்கப்படாதீர்கள்.

எந்தப் பிரச்சனை நடந்தாலும் உடனே அழாதீர்கள். ஏனெனில் சுலபமாக அழும் பெண்களை ஆண்கள் திசை திருப்பி விடுவார்கள்.
ஒரு ஆண் உங்களிடம் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதை வைத்துதான் ஒரு பெண் ஆணிடம் எவ்வளவு தூரம் நட்புறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்.

Source - Tamil News Online